Mr Nadarajah Premkumar
(Retired HnB Senior Manager)
Date of Birth: 23 June 1953 - Deceased: 12 June 2025
யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பத்தரமுல்ல கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராஜா பிரேம்குமார் அவர்கள் 12-08-2025 வியாழக்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை நடராஜா - யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன் - நேசமணி தம்பதியினரின் மருமகனும்,
ரேணுகா (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷாந்த், பிரவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவித்ரா, கிஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தன்வியாவின் பாசமிகு பாட்டனாரும்,
காலஞ்சென்ற பிரேமராஜா, பிரேமினி, கணேஷானந்தம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிரேமரஞ்சன் (இலண்டன்), பிரமேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
25/1, Centre Road,
Jayanthipura, Battaramulla.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
