திரு. நடராஜா சுரேஸ் இந்திரன்

நடராஜா சுரேஸ் இந்திரன்

தோற்றம்: 09 மே 1964 - மறைவு: 18 மே 2025

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றை பிறப்பிடமாகவும், வவுனியா - சின்னப் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சுரேஸ் இந்திரன் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா - அன்னபாக்கியம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி - குகனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

இரவீந்திரன், விஜேந்திரன் ஆகியோரின் சகோதரனும்,

லோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலாம்பிகை, அகிலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,

வினுஜாவின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா வௌிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2025 04:00)