Mr. Nadarasa Kailayar
(இளைப்பாறிய ஆசிரியர்)
Date of Birth: 25 July 1934 - Deceased: 30 August 2025
யாழ். துன்னாலை கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா கயிலாயர் அவர்கள் சனிக்கிழமை 30-08-2025 அன்று தனது மணியாதோட்ட இல்லத்தில் காலமானார்.
அன்னார், நடராசா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,
ரெஜிஸ்ரார் சபாபதிப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வி (பபி), இளஞ்செல்வி (உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராஜா, காலஞ்சென்ற துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேரோண்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
