திருமதி. நடராசா நாகேஸ்வரி

நடராசா நாகேஸ்வரி

மறைவு: 11 ஜனவரி 2026

யாழ். காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், கருங்காலி வேரக்குளம் மல்லாவி (அம்மாகடை) சாந்தசோலை, இறம்பைக்குளம் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா நாகேஸ்வரி அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மணியம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சரஸ்வதி (இலங்கை), உதயகுமாரி (இலங்கை), தர்மராசா (இலண்டன்), செல்வகுமாரி (இலண்டன்), தேவிகா (இலண்டன்), அம்பிகா (பாரிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இலங்கேஸ்வரன், செல்வரத்தினம், லோகராணி, சுந்தரலிங்கம், யோகானந்தராசா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவித்திரா, சோபா, சாம்பவி, சுரேந்திரன், அனுசூயா, காயத்திரி, ருசாந்தினி, டனுசன், கஜன், சதுர்சன், கீர்த்திகா, கீர்த்தனா, தினேஸ், பிரகாஷ், ஆகாஷ், பவினா, லக்‌ஷிகா ஆகியோரின் அன்பு பாட்டியும்,

விவ்வியானா, அஷ்வத், அத்மிகா, அஷ்வி, வினோசாத், கிரிஷ்வின், பிரவீன், ரஷ்மிகா, ஆஷா, அட்சயா, அபிஷா, சபரீஷ்வரன், லாதாங்கன், சங்கவி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் ராணி மில் வீதி, இறம்பக்குளம், வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2026 00:00)