திரு. நடராசா சுதாகரன்
தோற்றம்: 08 மார்ச் 1964 - மறைவு: 11 மே 2024
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், செல்வநாகம் வீதி வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதாகரன் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா - தையல்நாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நடராசா - அம்பலவாணி, கமலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவிந்திரகுமாரி, பங்கஜா, சூரியகலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மாலினி, திருவேரகன் (ஜேர்மனி), கலைவாணி (பிரான்ஸ்), குருபரன் (பிரான்ஸ்), இளந்திரையன், ஜெயவாணி, தியாகரன், காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் மைத்துனரும்,
கிருபானந்தன் (பிரான்ஸ்), சித்ரா (பிரான்ஸ்), சசிகலா, முகுந்தன் ஆகியோரின் சகலனும்,
(லக்சிகா, கேசிகன், கீரத்திகன், விதுசன், யதுசன், தனுசன், தனுசா, சோபிகா - பிரான்ஸ்), கபிஷன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
தியாளினி, சஜீவன், துசாந்தி, பிரசாந், வேணுகா ஆகியோரின் மாமனாரும்,
அஸ்வின், அஜினன், அக்ஷயன், அபினவன் ஆகியோரின் மாமாவும், பிருந்தா, பிரிதா, பிரஜினா, திவ்யாசினி, லிதுஷன், கவனிஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
