திரு. நடேசன் கிருஸ்ணகுமார்

(ஓய்வுபெற்ற பொறியியலாளர்)

நடேசன் கிருஸ்ணகுமார்

தோற்றம்: 25 செப்டம்பர் 1952 - மறைவு: 05 ஜூன் 2025

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இல-23A, ரத்னகார பிளேஸ், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசன் கிருஸ்ணகுமார் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் - பத்மாவதி தம்பதியினரின் இரண்டாவது புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - இந்திராணி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன் (அவுஸ்திரேலியா), பிரணவன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தாட்சாயினியின் பாசமிகு மாமனாரும்,

யாழினி, எயினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டானாரும்,

காலஞ்சென்ற சிவக்குமார், அசோக்குமார், நந்தகுமார் ஆகியோரின் சகோதரனும்,

ஜெயசீலன், ரத்தினசீலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 04:00)