திருமதி. நடேசப்பிள்ளை தனபாக்கியம்
தோற்றம்: 06 ஜூன் 1946 - மறைவு: 18 ஏப்ரல் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம், நாமக்கல் பொட்ரப்பட்டி கிராமத்தை பூர்வீகமாவும், இல-4 1/2, உம்பிச்சி பிளேஸ், ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்ப-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசப்பிள்ளை தனபாக்கியம் அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயகுமார், ஜெயக்குமார், திருச்செல்வம், புஷ்பராணி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுசிலா, தேவி, கோகிலா, ரவீந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
சீதாலட்சுமி அவர்களின் சகோதரியும்,
லக்ஷயகாந்தன், சஹானா, சந்தோஷ், ஆதித்யா ஆகியோரின் அப்பாயியும்,
பிரகீஷன், சிவசக்தி, ஹரிஹரன் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-04-2025 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
