திரு. நடேசர் சிவயோகசுந்தரம் (சின்னத்தம்பி)

நடேசர் சிவயோகசுந்தரம் (சின்னத்தம்பி)

தோற்றம்: 30 அக்டோபர் 1951 - மறைவு: 07 ஏப்ரல் 2024

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜாஎலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசர் சிவயோகசுந்தரம் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசர் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோபர் நியூமன் - பெறில் நியூமன் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

எஸ்தர் (ஜாஎல) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவஞானசுந்தரம் (கனடா), சிவகாம்பிகை, கமலாம்பிகை (ஆச்சி), இராஜேஸ்வரி (பவானி ரீச்சர்), சிவராஜசுந்தரம் (அபுதாபி), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவசுரேஸ் (ஜாஎல), சிவசுரேஷினி (லண்டன்), சிவநரேந்திரன் (Colombo Assistant General Manager - Head of Broken Sales of Allianz Insurance Lanka Ltd) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றீற்ரா (ஜாஎல), பிரதீபன் (லண்டன்), சாதனா (ஜாஎல) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சொமேஸ், சலோம், அயோன், ஹரிஷ், பவிஷா, எமிஷியா, எவொன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், உருத்திரமூர்த்தி மற்றும் லக்சுமி, மைதிலி ஆகியோரின் அன்பு மைந்துனரும்,

குமரன், நந்தன், ஸ்ரீ பிரணவன் ஆகியோரின் அன்பு சின்னமாமாவும்,

முகுந்தன், புவனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அவரது சுதுமலை இல்லத்தில் நடைபெற்று புகழ் உடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 00:00)