திரு. நாகமணி பூபாலசிங்கம் (பூபாலு)

நாகமணி பூபாலசிங்கம் (பூபாலு)

தோற்றம்: 04 பெப்ரவரி 1944 - மறைவு: 24 ஏப்ரல் 2023

யாழ். உரும்பிராய் அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி பூபாலசிங்கம் அவர்கள் 24-04-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குட்டித்தம்பி, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

வரதன் (அவுஸ்திரேலியா), ஜெயசாந்தன் (கோபன்- சுவிஸ்), ஜெனோதாஸ் (லண்டன்), எடிசன் (ஜேர்மனி), கோகிலா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கீதாஞ்சலி, வனிதா, ஜெயசீலி, சிவசோதி, உமாகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கரீஸ்ராகவன், பிரியங்கா, வாகேஷ், றிக்திஹன், சைந்திஹன், சகானா, பூவிகா, ஜனித், அபிநயா, அட்சயா, ஆதித்தியா, பானுஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவக்கொழுந்து (பவளம்), காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, சொர்ணம், தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, நவரட்ணம், இராமசாமி, கமலா, பாக்கியலீலா, தர்மவதி, இரத்தினசிங்கம், வவா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:-
 
அம்மன் வீதி,
உரும்பிராய் மேற்கு,
யாழ்ப்பாணம். 
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2023 09:04)