Mr. Nagamani Sabarathnam
(ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் - பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ.சங்கம்)
Date of Birth: 05 April 1954 - Deceased: 30 March 2024
யாழ். மாதகல் மேற்கு மாதகலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க.நா.சபாரத்தினம் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி - இளையாச்சி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
அன்ரன் ஞானராஜா - காலஞ்சென்ற பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ஜயந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,
அன்னப்பிள்ளை, காலஞ்சென்ற அருணாசலம், நாகரத்தினம், இராசமணி, முத்துப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபாலதிபர் - மானிப்பாய்), நவமணி (ஜேர்மனி), கடம்பமலர் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலராஜ், சுபோதினி (லிகிதர்- பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ.சங்கம்), கிருசாந்தன் (உதவி அதிபர் - மகாஜனா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பட்டினசபை ஒழுங்கை மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மாதகல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
