திரு. நாகமணி பரதராஜா
(ஓய்வு பெற்ற தலைமை புகையிரத பாதுகாவலர்)
தோற்றம்: 21 ஏப்ரல் 1930 - மறைவு: 20 செப்டம்பர் 2025
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகமணி பரதராஜா அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மனோகரன், மாலினி (டென்மார்க்), வசந்தி (இலண்டன்), பிரபாகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெங்காதரன் (டென்மார்க்), ஸ்ரீஸ்கந்தன் (இலண்டன்), சகிலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, கீர்த்தன், யதார்த்தன், அனந்திகை, அம்பிகை, அக்ஷிதா, அதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்யா, அலோரா, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை, முத்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
