திருமதி. தனலெட்சுமி நாகராசா
தோற்றம்: 15 ஜூன் 1932 - மறைவு: 20 மே 2022
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா தனலெட்சுமி அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு வேலுப்பிள்ளை நாகரெத்தினம் தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற V.K நாகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நாகலெட்சுமி(ராணி), நவலெட்சுமி (நவம்), ஸ்ரீஸ்கந்தராசா (ராசன்), ஸ்ரீதனராசா (ஸ்ரீ), தவமலர் (மலர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகலிங்கம், ஸ்ரீதிருமகன், சுகந்தி, சிவானந்தி, உலகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற V.K. பாலசிங்கம், V.K. பரஞ்சோதி (அதிபர்- கனடா), Dr. V.K. ஆனந்தமூர்த்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு அண்ணியம்மாவும்,
உலகநாயகி, மங்களாம்பாள் (ஆசிரியை), காலஞ்சென்ற ஜானகிதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான சிவசங்கரன், சாம்பசிவம், நாராயணன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மாரிமுத்து மற்றும் திருநாவுக்கரசு மாமணி, காலஞ்சென்ற சாம்பசிவம், சிவசோதி, காலஞ்சென்றவர்களான சிவசாமி புவனேஸ்வரி, பேரம்பலம் மீனாட்சி ஆகியோரின் சம்மந்தியும்,
சசீபன்- உஸிகா, சஜீதன் - மதுரா, சகீஸன் - ஜஸிகலா, சுஜீபன், ஆரணி, சங்கீர்த்தன், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சயோதன், அருண்யா, சாகித்தியன், சபரீசன், சீனுசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அஜன், ஆதி, ஸிவானி, ஜெய்டன், றியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
