திருமதி. நாகரட்னம் பரமநாதர்

நாகரட்னம் பரமநாதர்

தோற்றம்: 14 செப்டம்பர் 1924 - மறைவு: 06 அக்டோபர் 2021

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்னம் பரமநாதர் அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் பரமநாதர்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சறோஜினி, சாந்தினி (Canberra) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாம்பசிவம், றஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னையா குமாரசாமி (கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

வரதலஷ்மி அவர்களின் அன்பு மைத்துனியும்,

கோகுல், மஞ்சுளா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

அபிராமி, நித்யா, றாம், விக்ரம், உமா, Matthew Doolan, Matthew Trewin, மாதுமை ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

மகிமை, சஷா, மகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கொரோனா விதிமுறைகளுக்கு அமைய குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2021 00:19)