திரு. நாகரத்தினம் ரவீந்திரநாதன் (ரவி)
தோற்றம்: 26 ஜனவரி 1952 - மறைவு: 14 ஜூலை 2025
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரத்தினம் ரவீந்திரநாதன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு . திருமதி நாகரத்தினம் தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான மீனா, ரகு மற்றும் ரமணன் (மெல்பேர்ன்), ராதா (இலண்டன்), நீலா (மெல்பேர்ன்), ரங்கன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராஜரத்தினம் (கொழும்பு), தணிகாசலம், சசிகலா, வத்சலா, மனோகரி ஆகியோரின் மைத்துனரும்,
சகாதேவனின் (யாழ்ப்பாணம்)அன்பு மருமகனும்,
ராதிகா-ஆதவன், பிரவீன்- பிரசீனா, நாராயனி- அனுஜன், ஆரணி-Paul, மாருதன்- ஷெகானி, மீனுஜன் , டீகஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கியன், வருண், அணிக்கா, ஷ்ரேயா, மேக்னா, Pete, Nate, மீனா, ஷைலா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் Boyd Chapel - Springvale Botanical Cemetery (600 Princes Highway, Springvale VIC 3171) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
