ஸ்வர்க்கஸ்ரீ நாகேந்திர சர்மா நாகபூசணியம்மா

(கொடிகாமம் அல்லாரை ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தான ஆதின கர்த்தா)

நாகேந்திர சர்மா நாகபூசணியம்மா

மறைவு: 05 ஏப்ரல் 2024

யாழ். தென்மராட்சி கொடிகாமம் அல்லாரை அறுகம்புலம் மகா கணபதிப்பிள்ளையார்  ஆலய ஆதி நித்ய பூஜாகுரு ஸ்வர்க்கஸ்ரீ சிவானந்தஐயாவின் மூத்த மகளும்,

கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் ஆதி நித்ய பூஜாகுரு ஸ்வர்க்க ஶ்ரீ நாகேந்திர சர்மா (கண்டி- B.N.SHARMA) அவர்களின் துணைவியும், 

கொடிகாமம் அல்லாரை ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தான ஆதின கர்த்தாவுமாகிய  ஸ்வர்க்கஸ்ரீ நா.நாகபூசணியம்மா அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் இறைபதம் அடைந்தார்.

அவரின் ஈமக்கிரியைகள் அல்லாரை இல்லத்தில் நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2024 00:00)