செல்வி. நாகேசு சுதந்திராதேவி JP, BA

(ஓய்வுநிலை வீடமைப்புத் திணைக்கள அதிகாரி)

நாகேசு சுதந்திராதேவி JP, BA

தோற்றம்: 03 பெப்ரவரி 1949 - மறைவு: 09 ஏப்ரல் 2025

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நாகேசு சுதந்திராதேவி அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு - நாகரெத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும், 

காலஞ்சென்ற சிவராசசிங்கம் (முன்னாள் அறங்காவலர் சபைத் தலைவர் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்), வசந்தாதேவி, சவுந்தராதேவி (கனடா), ஜெகராசசிங்கம் (சட்டத்தரணி முன்னாள் விரவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா), ஜெயராசசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஏகநாயகவல்லி (ஓய்வுநிலை ஆசிரியை - கனடா), தனபாலசிங்கம் (தலைவர் - தனியார் படகு உரிமையாளர் சங்கம், நயினாதீவு), தவகுகதாசலிங்கம் (கனடா), கிசானி (அவுஸ்திரேலியா), உதயராணி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நயினாதீவு சல்லிப்பரவை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2025 04:00)