திருமதி. நகுலேஸ்வரி பாலேந்திரா
தோற்றம்: 27 மே 1942 - மறைவு: 17 செப்டம்பர் 2025
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நகுலேஸ்வரி பாலேந்திரா அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் சம்பந்தர் - பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகசபாபதி - சிவயோகம் தம்பதியினரி அன்பு மருமகளும்,
பாலேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
இளங்கோ (இலண்டன்), சேரன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
நாராயணி, சங்கரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மித்திரன், ஓவியா, கனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், ஈஸ்வரானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஈழவேந்தன், யோகேந்திரன், இந்திராணி மற்றும் விஜேந்திரராணி (குட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.45 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
