திருமதி. நாளினி கணபதிப்பிள்ளை
(ஓய்வு பெற்ற ஆசிரியை விக்னேஸ்வரக் கல்லூரி கரவெட்டி வடமராட்ச்சி மத்திய மகளிர் கல்லூரி)
மறைவு: 28 மார்ச் 2021
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் முடக்காடு வீதி சாமியன் அரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாளினி கணபதிப்பிள்ளை இன்று (28.03.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
அனுக்கிரகா (ஆசிரியை யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை பருத்தித்துறை ), பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளவன் (பிரான்ஸ்) மாறன் (கனடா), சேரன் (பொறியியலாளர், அமெரிக்கா) தாட்சாயினி (ஆசிரியை, கொழும்பு) காலஞ்சென்ற மாலினி (பொறியியலாளர், மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) மற்றும் தனஞ்செயன் (பொறியியலாளர், RDA, கொழும்பு), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பேராசிரியர் சிவத்தம்பி, சோமஸ்கந்தராஜா ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி,யோகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,
துஸ்யந்தினி, பாமினி, கிருஸ்ணகுமாரி, சிவகுமாரன், லலிதாமணி ஆகியோரின் மைத்துனியும்,
ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (29.03.2021) திங்கட்கிழமை முடக்காடு வீதி, சாமியன் அரசடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காலை 9.30 மணியளவில் சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"பிள்ளைகளான அனுக்கிரகா, பிரியங்கா ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை 1979 இல் நாளினியுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவ மாணவிகளின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். "
- க. மணிவண்ணன் (Australia, 29/03/2021 18:12)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2021 15:21)
