திருமதி. நல்லப்ப ரெட்டியார் சிவகாமு
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1940 - மறைவு: 10 ஆகஸ்ட் 2024
ஹட்டன்-கொட்டகலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லப்ப ரெட்டியார் சிவகாமு அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் ரெட்டியார்-லட்சுமி அம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி ரெட்டியார்-பொன்னம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
இந்தியா-திருச்சி மாவட்டம் ஆதனூர் கிராமத்தினைப் பிறப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற நல்லப்ப ரெட்டியார் அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லுசாமி ரெட்டியார், காலஞ்சென்ற காமட்சி அம்மாள் ஆகியோரின் சகோதரியும்,
அன்னகாமு, சரோஜா, சிவராஜ் ரெட்டியார் (NCJ ஜீவலர்ஸ் & பவுண் புரோக்கர்ஸ், கொழும்பு-02) ஆகியோரின் தாயாரும்,
புஸ்பராஜ் ரெட்டியார் (கொட்டகலை), தர்ஷினி ஆகியோரின் மாமியாரும்,
அருண் பிரகாஷ் (கனடா), கிருஷ்ணதயாள், சஜீவ் பிரசாத் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-08-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
36/3/1, பெரெய்ரா லேன்,
வௌ்ளவத்தை, கொழும்பு-06.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
