Mr. Nallu Subramaniam
(Former Field Office-Dunsinane Estate)
Date of Birth: 01 December 1938 - Deceased: 10 November 2024
நுவரேலியா-பூண்டுலோயா பிறப்பிடமாகவும், நுகேகொடயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லு சுப்பிரமணியம் அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. நல்லு தம்பதியினரின் அன்பு மகனும்,
கண்ணாத்தாள் அவர்களின் அன்புக்கணவரும்,
நவீனன், பூரிக்கோ, மைத்திரீபன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
லக்ஷிகா, ரஜனி ஆகியேராின் பாசமிகு மாமனாரும்,
கவிஷா, கெனோன் பிரணவ், அக்ஷரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 11-11-2024 திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-12-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
