திருமதி. நந்தகுமார் அமுதராணி (உசா)
தோற்றம்: 20 நவம்பர் 1969 - மறைவு: 19 ஜூன் 2021
யாழ். காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் அமுதராணி அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம் (ஊறணி சிவன் வெதுப்பகம் காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற குணலிங்கம் (துரை), சிறீராணி (பேபி) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராஜேஸ்வரி (ஈஸ்வரி கார்ட்வேர்ஸ் ஸ்ரோஸ்- சுன்னாகம்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நந்தகுமார் (Bobigny தமிழ்ச் சங்கத் தலைவர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
நிதர்சன், நிதர்ணியா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேந்திரன் (வாசிங்ரன்- கனடா), பரமேந்திரன் (மிற்றன்- இலங்கை), கோகிலராணி (நிசா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமார்- சுமதி(பிரான்ஸ்), துரைநாயகம்(பிரான்ஸ்), சிவனேஸ்வரி, ஞானேஸ்வரி(இந்தியா), தர்சினி(கனடா), நளினி(இலங்கை), பிருந்தாபன், சிவராஜா ஆகியோரின் மைத்துனியும்,
நிதுர்ஷா, சுபிக்ஷா, தனுயா, அனுயா(பிரான்ஸ்), சுகிர்தா(கண்ணா), சுகிர்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஜனனி, ஜினோசன், ஜதூஷன்(இந்தியா) ஆகியோரின் மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
