திரு. நாராயணன் ரெட்டியார்
தோற்றம்: 10 ஜூலை 1946 - மறைவு: 16 ஜூன் 2024
இந்தியா-திருச்சி மாவட்டம் பெரமங்களம் கிராமத்தை பூர்வீகமாகவும், பூண்டுலோயாவை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும கொண்ட திரு. நாராயணன் ரெட்டியார் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் ரெட்டியார் (முன்னாள் ரேவதி தியேட்டர் உரிமையாளர்)-செல்லபாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
நோர்வூட் காலஞ்சென்ற வெங்கடாசலம் ரெட்டியார்-அம்மனி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ராஜாமணி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற நடராஜ், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்குமார், செந்தில்குமார், கவிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,
பிரேம்குமார், ரம்யா, பிரபாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னகாமு, பாலகிருஸ்ணன், புஸ்பராஜா, காலஞ்சென்ற நடராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களின் சகலையும்,
பிருந்தவி, லவன், தஸ்வந், தியான், புனர்நவி, நிலன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 19-06-2024 புதன்கிழமை மதியம் 1.00 மணிய வரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
