திரு நாராயணபிள்ளை யோகராசா

(வினைல்ஸ் கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர்- சுன்னாகம்(1983-2022))

நாராயணபிள்ளை யோகராசா

தோற்றம்: 12 செப்டம்பர் 1950 - மறைவு: 15 மே 2022

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட நாராயணபிள்ளை யோகராசா அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிறிறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷன்(மின்சாரசபை ஊழியர்), சுகாசினி(தமிழ்ச்சோலை ஆசிரியை-Bondy, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாசுதேவபாலகர்(பிரான்ஸ்), சர்மிளா(அச்சுவேலி மெதடில் கல்லூரி- ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, ராஜபூபதி, பொன்னம்மா மற்றும் சுதந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைசிகா, வர்ணிகா, அக்சயா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம்மா, பார்வதி, பூதப்பிள்ளை, சாவித்திரி, ஆனந்தன், வைரமுத்து, சிவமணி மற்றும் இராசபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2022 13:35)