திருமதி. நசீமா பூபாலசிங்கம்
தோற்றம்: 14 ஜனவரி 1951 - மறைவு: 15 நவம்பர் 2024
கொழும்பு-வத்தளையை வசிப்பிடமாக கொண்ட திருமதி. அலிசித்தி நசீமா பூபாலசிங்கம் அவர்கள் 15-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காரைநகர் முல்லைப் பிளவைப் பிறப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற கந்தையா பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், கருணாகரன், ஹரிஹரன், அம்பிகாதேவி, கிருஷ்ணாகரன் ஆகியோரின் தாயாரும்,
கல்பனா, மதனிகா, பிரீத்தி, சுஜாதா ஆகியோரின் மாமியாரும்,
லக்ஷனா, கிரண், மகேஷ், லக்ஷிகா, அஜய், அர்ஜீன், அஸ்லின், ஹரிசன், ஹரிஷ்வின் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை முதல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 18-11-2024 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
215/2, ஹெந்தளை ரோட்,
வத்தளை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
