யாழ். அல்லாரை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், காளியானை புத்தூர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணராசா பூலோகராணி அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற நல்லையா - தவமணி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
நற்குணராசா (ஓய்வுபெற்ற தாதி உத்தியோகத்தர் - யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பூபாலசிங்கம், காலஞ்சென்ற பூலோகநாயகி, பூலோகநாதன் (பிரான்ஸ்), பூலோகிந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துரைராஜா (இலண்டன்), நவரத்தினராஜா (இலண்டன்), சர்வானந்தம் (கனடா), செல்வராணி, காலஞ்சென்ற பரமனாந்தராஜா, சண்முகராஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிறூபன் (பொது சுகாதார பரிசோதகர்), நிதர்சன் (கனடா), நிலக்ஷிகா (உதவி விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவானி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - தென்மராட்சி கல்வி வலயம்), சஜித்தா (கனடா), சுகன்யா (மென் பொறியியலாளர்) ஆகியயோரின் பாசமிகு மாமியாரும்,
ஆதிரா, ஆருஷ், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் புத்தூரில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் அந்திரானை இந்து மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

