Mrs. Navamani Sachchithanantham
Date of Birth: 01 April 1937 - Deceased: 23 April 2025
கண்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நவமணி சச்சிதானந்தம் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அழகு கருப்பையா - பார்வதி தம்பதியினரின் புத்திரியும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் (இளைப்பாறிய உத்தியோகத்தர் - இலங்கை புகையிரத தலைமையகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நடராஜா, ராசையா, வடிவேல், சரஸ்வதி சிவசுப்பிரமணியம், செல்வத்துரை, செல்வி. அனுராதா, Dr. A. C. விஸ்வலிங்கம் (இலங்கை), செல்வம் சண்முகராஜா, மல்லிகா தியாகராஜா, A. C. சுகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஶ்ரீதரன் (கொழும்பு), அரவிந்தன் (கனடா), கிரிதரன் (கனடா), ராதிகா (கனடா), முகுந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜயோகினி (கொழும்பு), குமுதா (கனடா), சிவதர்ஷினி (கனடா), இளங்கேசன் (ராஜ்-கனடா), குமுதினி (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
அஸ்வினா, அவினாஸ், அக்ஷே, மயூரன், அர்ஜீன், சஞ்சய், சிந்துஜன், அபிஷேக், ராகுல் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
