திரு நவரத்தினம் சிவசக்திவேல்
தோற்றம்: 04 ஆகஸ்ட் 1954 - மறைவு: 26 ஏப்ரல் 2020
யாழ். உடுவில் கிழக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சிவசக்திவேல் அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் ரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவறதீஸ்(யாழ். மகாஜனா கல்லூரி), சிவானி(பிரான்ஸ்), சிவசாந்(முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு வடமாகாணம்), சிவஜன்(தொழில்நுட்பக் கல்லூரி), பிரிசாந்(பனை அபிவிருத்திச் சபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணராசா(பிரான்ஸ்), கோகுலவதனி, நஜிதா, துசிதா, பிரகாசினி(கட்டடங்கள் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு மாமனரும்,நந்தகுமார், காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யசிதரன்(பிரதேச செயலகம், உடுவில்) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
மதுக்ஸா, அஸ்வின், அஸ்விகா, அஸ்வினா, தாகினி, டனுசாந், டிதுக்ஸ் ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
