திரு. நவரத்தினம் பாக்கியராசா
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)
மறைவு: 14 மார்ச் 2026
யாழ். காரைநகர் புதுறோட் மல்லிகையை பிறப்பிடமாகவும், யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நவரத்தினம் பாக்கியராசா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (ஆசிரியர்) - தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா (MGR), ஸ்ரீகரலட்சுமி, சாரதா, லலிதா (அன்னம்) மற்றும் கோகனதை (சுவிஸ்), நிர்மலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2026 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
