திரு. நவரட்ணம் நித்தியானந்தராசா

நவரட்ணம் நித்தியானந்தராசா

தோற்றம்: 21 ஜனவரி 1936 - மறைவு: 30 மார்ச் 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ - சொய்சாபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் நித்தியானந்தராசா அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னரா், காலஞ்சென்ற நவரட்ணம் - நித்திலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,

குணமதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நித்தியஹரன், குணராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சலாவின் பாசமிகு மாமனாரும்,

அபிநயா, ஷிரணியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

சிவானந்தராஜா, காலஞ்சென்ற துவாரகாதேவி, நவானந்தராஜா, சந்திரலேகா, காலஞ்சென்ற ரதி, சாந்தினி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னராின் இறுதி நிகழ்வுகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் (No-164/26, Keels Housing, Soysapura) அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-04-2025 புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2025 04:00)