Mrs. Nesamalar Anandarajah
Date of Birth: 06 October 1948 - Deceased: 04 May 2022
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நேசமலர் ஆனந்தராஜா அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகரட்னம் ஆனந்தராஜா(ஓய்வுபெற்ற வயாவிளான் மத்திய மகா வித்தியாலய விஞ்ஞான ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தி (அவுஸ்திரேலியா), துஷாந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநிரூபன் (அவுஸ்திரேலியா), மணிசேகரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புஷ்பராணி, இந்திராணி, செல்வராணி, நந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தினோஜ், தருண் (லண்டன்), ஆஹர்ஷன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் 57 சோடா கொம்பனி லேன், மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கட்டுவன் வீதி, மல்லாகத்தில் உள்ள சப்பிட்டியான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
