திரு. நிக்கோலஸ்பிள்ளை கிளாரன்ஸ் செல்வரட்ணம்
தோற்றம்: 26 ஏப்ரல் 1946 - மறைவு: 08 ஜனவரி 2024
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், Bondy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கோலஸ்பிள்ளை கிளாரன்ஸ் செல்வரட்ணம் அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆக்னஸ் நிக்கோலஸ்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஸ்டானிஸ்லாஸ், ராஜரத்தினம், விக்டர் பாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசின்தா (ஜெயசீலே) அவர்களின் அன்புக் கணவரும்,
அமலராஜ், அமலரஜனி, அர்னவுத்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோயிக் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
மாது, விது, ஹ்யூகோ, ஈதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சிரோன் - புவனேஸ்வரன், காலஞ்சென்ற காமினி - ப்லோரா ஆகியோரின் பாசமிகுச் சகலனும்,
ஜனன், சதீஷ், ஆக்னஸ், அனித், நிக்கோலஸ், நிரோஜ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
திருப்பலி:-
www.tamilthakaval.org
