Late. Palaniyandi Dhanpakkiyam (Pappa)
Deceased: 25 October 2025
கண்டி - பேராதனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - முத்தையன்கட்டு ஜீவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். பழனியாண்டி தனபாக்கியம் அவர்கள் 25-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பழனியாண்டி - ஆண்டிச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
பச்சமுத்து, செல்லம்மா, சரஸ்வதி (இந்தியா), காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, செல்வராசா, குமாரவேல், இராசம்மா, இராசலிங்கம் (பச்சை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாரியாயி, இராசலட்சுமி, முருகேசபிள்ளை, விஜயராணி, கலா, காலஞ்சென்ற சரஸ்வதி, வெள்ளையன், சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவடல் இடதுகரை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
