Mrs. Paramaguru Saraswathy
Date of Birth: 02 April 1952 - Deceased: 11 October 2025
யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமகுரு சரஸ்வதி அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விநாசிதம்பி - மங்கையற்கரசி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பரமகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சோபனா, துவாராக ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சிவகுமாரின் மாமியாரும்,
சிவசஞ்சனா, சிவயுகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சேதுநாயகம், செல்வநாயகி, வல்லிபுரம், சந்நிரநாயகம், ஜெயராஜா, நவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
