திருமதி. பரமநாதன் கமலாம்பிகை
மறைவு: 15 ஆகஸ்ட் 2025
யாழ். காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியையும், காரைநகர் சம்பந்தர் கண்டியை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. பரமநாதன் கமலாம்பிகை 15.08.2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் - சேதுபிள்ளை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான V.முருகேசு - சுந்தரம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற V.M.பரமநாதனின் அன்பு மனைவியும்,
ராஜேஸ்வரி, முருகேசு, வரதராசா, ஆனந்தராஜா, சற்குணராசா, தயானந்தராசா ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கந்தையா, பாலசிங்கம், சண்முகம் அவர்களின் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகரட்ணம் மற்றும் யோகேஸ்வரி, இரட்ணேஸ்வரி, சிவகங்கா, மனோகரி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற வேல்குமரன் மற்றும் ஞானதாட்சாயினி, நிதர்சன், உமாதர்சினி, கமலருபன், விதுசா, விதுஷன், மிதுனா, டனுஷியா ஆகியோரின் பேர்த்தியாரும்,
காவியன், அமிர்தா ஆகியோரின் பூட்டியாரும்,
காலஞ்சென்றவர்களான V.M.சண்முகம், V.M.கந்தையா, V.M.பேரம்பலம், செல்லம்மா, பொன்னம்மா அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் காரைநகர் சம்பந்தர்கண்டியில் நடைபெற்று, திருவுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
