Mr Paramendran Premkumar
(Retired Engineer SLT)
Date of Birth: 29 January 1958 - Deceased: 02 September 2022
யாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு உப்புமடம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேந்திரம் ரயு குமார் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமேந்திரம், கேமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மலோஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீர்ணா, நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனோஜன், மூந்தரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆகவி அவர்களின் பாசமிகு பேரனும்,
வசந்தினி, நந்தகுமார்(லண்டன்), சுமதினி(கனடா), ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன், சத்தியா(லண்டன்), சுரேன்(கனடா) ,மேரி, சந்திரலோஜினி, ஞானலோஜினி, தர்மராஜா, ஞானேஸ்வரன்(கனடா), தர்மநேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கேமேந்திரன், ரவீந்திரன், தியாகேந்திரன், யதீந்திரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கைலேஸ்வரி(கனடா), ராஜயோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
No 33,1/4, 42nd Lane,
www.tamilthakaval.org
