திருமதி. பரமேஸ்வரி (பரமக்கொடி) அருந்தவராஜா

பரமேஸ்வரி (பரமக்கொடி) அருந்தவராஜா

தோற்றம்: 23 மார்ச் 1934 - மறைவு: 07 ஜூலை 2024

யாழ். தொண்டைமனாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி அருந்தவராஜா அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு-செல்லப்பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற அருந்தவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி (வள்ளிக்கொடி), கமலேஸ்வரி (குட்டி) மற்றும் ராஜேஸ்வரி (பவுண்), காலஞ்சென்ற அருந்தவராசா (கிட்டிணசாமி), பரமநாதன் (கிளி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிறீகாந்தன் (கட்டி), மதியழகன் (மதி), சிறீமதி (தேவி), சத்தியவாணி (வாணி), மணிவண்ணன் (வண்ணன்), மலர்விழி (விழி), மான்விழி (மான்), காலஞ்சென்ற ராஜராஜன் (ராஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2024 திங்கட்கிழமை அன்று கொத்தியகாடு, தொண்டைமானாற்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில்  புகழுடல் தொண்டைமனாறு காட்டுப்புலத்து இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2024 04:00)