திரு. பரமேஸ்வரம் சுதாசங்கர்
தோற்றம்: 25 மே 1953 - மறைவு: 25 நவம்பர் 2023
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரம் சுதாசங்கர் அவர்கள் 25-11-2023 ஆம் திகதி சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமேஸ்வரம், கௌரிமனோகரி அவர்களின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சிவசேகரம், தனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,
செந்தாமரையின் பாசமிகு கணவரும்,
யாழினி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அகில் அவர்களின் ஆசை அம்மப்பாவும்,
ரவிசங்கர், ரஜினி, ஷியாமினி, ராஜீவ்சங்கர், காலஞ்சென்ற பவதாரணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அலமேலுராணி, சாந்திகுமார், கணேஷ்வரன், நிர்மலா, மதிவாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-11-2023 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில்அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
27/1, மக்ஹேய்சர் அடை வீதி,
உவர்மலை, திருகோணமலை
www.tamilthakaval.org
