திருமதி பரமேஸ்வரி கமலேந்திரன்
(ஓய்வுபெற்ற ஆசிரியை - பாத்திமா மகளீர் கல்லூரி புத்தளம், கோணேஸ்வரா மகா வித்தியாலயம் திருகோணமலை, யா இந்து மகளீர் கல்லூரி,கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயம் கொழும்பு)
தோற்றம்: 15 மார்ச் 1941 - மறைவு: 13 பெப்ரவரி 2026
யாழ். களபூமி பாலாவோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கமலேந்திரன் அவர்கள் 13-02-2026 வெள்ளிக்கிழமை கொழும்பில் அன்னாரின் இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான S.S. கந்தையா (பாணந்துறை) - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - ருக்கிமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் கமலேந்திரன் (Asst. Commissioner of Labour) அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்கோவன் (கொழும்பு), கோதை (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. பாலினி (Colombo South Teaching Hospital), நிரஞ்சன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்ஷன், யதுஷன், காருண்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, மகாதேவன் மற்றும் வசந்தாதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருமதி மங்களேஸ்வரி நடராஜா, கலேந்திரன், பரமேஸ்வரி (விமலா) மற்றும் பொன்னம்மா, மனோகராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷ்யந்தி (கனடா), மச்யந்தி (இலண்டன்), துகிந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற மகிந்தன், பாலன் (கனடா), ரூபா (சுவிஸ்), சிவரூபன் (கனடா), காலஞ்சென்ற செங்குட்டுவன், தேவகி (இலண்டன்) ,வாசுகி (இலங்கை), மஞ்சுளா (இலண்டன்), வத்சலா (இலண்டன்), காந்தன் (இலண்டன்), வேந்தன் (இலண்டன்) ஆகியோரின் அன்ப் மாமியும்,
கிருத்திகா (கனடா), வளவன் (கனடா) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மறுநாள் 16-02-2026ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி வரை(8:30 am to 2:00 pm) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின்னர் பூதவுடல் பிற்பகல் 4:00 மணிக்கு பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
www.tamilthakaval.org
