திருமதி பராந்தகன் கவிதா

பராந்தகன் கவிதா

தோற்றம்: 04 நவம்பர் 1974 - மறைவு: 03 மார்ச் 2024

யாழ். வல்வெட்டித்துறை காங்கேசன்துறை வீதியினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரந்தகன் கவிதா அவர்கள்  03-03-2024  அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நடனசபாபதி ஞானவேல் (முன்னாள் நகரசபை செயலாளர்) மகேஸ்வரி (ஓய்வுபெற்ற முன்னாள் சிவகுரு பாடசாலை ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் ரூபவதி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் பராந்தகன் அவர்களின் அன்பு மனைவியும்,

கர்சன், சஞ்சித் அவர்களின் பாசமிகு தாயாரும்,.

ரஞ்சிதா நடேசன் அவர்களின் அன்பு சகோதரியும்,

வல்லிபுரம், நடேசன் மற்றும் பிரபாகர் சுமதி அவர்களின் மைத்துனியும்,

ஆரணி, மயூரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

டிலுக்சனாவின் மாமியாரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடலானது அவரது இல்லத்தில் நாளை (07-03-2024) காலை ஐந்து மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை 7 மணிக்கு கிரியைகள் இடம்பெற்று, தகனத்துக்காக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு 9 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2024 21:54)