திருமதி. பத்மபாஷினி செல்வாஸ்கந்தன்
மறைவு: 21 ஜனவரி 2022
யாழ் கொட்டடியிற் பிறந்தவரும், பிரபல தொழிலதிபர் சட்டத்தரணி திரு. இ. செல்வாஸ்கந்தன் அவர்களின் அன்புத் துணைவியாருமான திருமதி பத்மபாஷினி செல்வாஸ்கந்தன் அவர்கள் 21-01-2022ம் திகதி வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார்.
அன்னார், ஓய்வுபெற்ற சுங்கஇலாகா அதிபர் காலஞ்சென்ற திரு. பத்மநாதன், துவாரகாதேவி தம்பதியரின் ஏக புத்திரியும்,
ஓய்வுபெற்ற உதவி அரச அதிபர் காலஞ்சென்ற திரு. இராசரத்தினம், ஓய்வுபெற்ற ஆசிரியை காலஞ்சென்ற சௌபாக்கியவதி தம்பதியரின் அன்பு மருமகளும்,
வைத்தியக்கலாநிதி ஹரேஷ், சட்டவல்லுனர் அம்ரேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வைத்தியக்கலாநிதி திருமதி. லாகியின் அன்பு மாமியாரும்,
சாயீசாவின் அன்புப் பாட்டியும்,
பிரதீசன், பத்மபிரகாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
www.tamilthakaval.org
