திரு. பத்மநாதன் ஜெயராஜா
(போதகர், அகில இலங்கை சமாதான நீதவான்)
தோற்றம்: 04 நவம்பர் 1972 - மறைவு: 01 ஆகஸ்ட் 2024
யாழ். ஏழாலை குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும், இருபாலை கிழக்கை வளர்ந்த இடமாகவும், நெனியன் றோட் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜெயராஜா அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், பத்மநாதன்-சரஸ்வதி ருத் தம்பதியினரின் அன்பு மகனும்,
ராஜன் (சுவிஸ்), ஜெயந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லொறிண்டாமேரி அவர்களின் அன்புக் கணவரும்,
இலேனா ருத்தின் அன்புத் தந்தையும்,
தேவநேசனின் (மின் ஒட்டுநர், மின் இணைப்பாளர்) அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 05-08-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, கைதடி நுணாவில் கிறித்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
