திருமதி. பத்மநாதன் தனலெட்சுமி அம்மாள்
தோற்றம்: 28 டிசம்பர் 1951 - மறைவு: 25 மே 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் தனலெட்சுமி அம்மாள் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரநாராயணசாமி - பார்வதி அம்மாள் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற மடக்குபரையைச் சேர்ந்த கருப்பண்ணன் சேர்வை - தனிக்கொடி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
கரு. பத்மநாதன் அவர்களின் மனைவியும்,
வசந்த் (பெங்களூர்), வினோதா (சென்னை) ஆகியோரின் தாயாரும்,
புஷ்பவதி (கொழும்பு), காலஞ்சென்ற இராஜேந்திரன், மகேந்திரன், இந்திராணி (கொழும்பு), கனகசுந்தரம், ஜெயந்தி (அவுஸ்திரேலியா), ஸ்ரீதரன் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராஜன், துரைசாமி, லீலாவதி (மாபோல), மகேஸ்வரி, சாந்தி, காலஞ்சென்ற முத்துலிங்கம், சக்திவேல் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை மாலை 04.30 மணி முதல் பொரளை சுப்ரீம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-05-2026 புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கரு.பத்மநாதன் (கணவர்):- +94 77 747 2938
www.tamilthakaval.org
