திருமதி பத்மாவதி பசுபதிலிங்கம்
தோற்றம்: 10 நவம்பர் 1943 - மறைவு: 22 பெப்ரவரி 2024
திருமதி. பத்மாவதி பசுபதிலிங்கம் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி. ரூபா, திருஞானலிங்கம், சிவஞானலிங்கம், அருள்ஞானலிங்கம், தமயந்தி ஆகியோரின் தாயாரும்,
திரு. கமலநாதன், மில்றோய், விஜயேஸ்வரி, சண்முகப்பிரியா ஆகியோரின் மாமியாரும்,
பிரணவ், அஸ்வின், தீக்ஷிகா, செவாக்ஷன், சாருக் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 23 மற்றும் 24 (வௌ்ளி, சனி) ஆம் திகதிகளில் வைக்கப்பட்டு, 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- வீரகேசரி
www.tamilthakaval.org
