திரு. பேரின்பராஜா செல்லத்துரை
(பிரபல தொழிலதிபர்- தென்கிழக்கு இங்கிலாந்து, தாளையன் Hotel அதிபர்- இலங்கை)
தோற்றம்: 20 மே 1959 - மறைவு: 07 ஆகஸ்ட் 2022
மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris, டென்மார்க் Fredericia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Orpington ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராஜா செல்லத்துரை அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லத்துரை(இராசமாணிக்கம்), விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை புவனராஜா, சர்வகலாநிதி புவனராஜா(கலா- லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிநயா, Dr. அபிராம், Dr. அபிலாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சைமன் (Simon-லண்டன்), Dr. சோமியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிஸ், இஸ்சபெல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ராஜேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற நாகேஸ்வரன், பரமேஸ்வரன்(ஜேர்மனி), ஸ்கந்தராஜா(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), செல்வமலர்(டென்மார்க்), நவமலர்(டென்மார்க்), தவமலர்(ஜேர்மனி), இந்துமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசோதி, கலாயோதி, இந்திராணி, சிவமதி, ராஜரட்ணம், யோகராஜா, ஸ்ரீராயமூர்த்தி, செளந்தரராஜன், காலஞ்சென்ற முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனஜா(லண்டன்), காங்கேயன்(லண்டன்) ஆகியோரின் மனைவி வழி மைத்துனரும்,
பரமேஸ்வரன்(லண்டன்), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
