திருமதி. பெரியசாமிப்பிள்ளை ராஜேஸ்வரி

பெரியசாமிப்பிள்ளை ராஜேஸ்வரி

தோற்றம்: 10 மே 1946 - மறைவு: 07 ஆகஸ்ட் 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் நடுவலூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெரியசாமிப்பிள்ளை ராஜேஸ்வரி அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பையாப்பிள்ளை-ருக்மணி தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற துரைசாமிப்பிள்ளை-பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற P.R.R.M பெரியசாமிப்பிள்ளை [தெல்தோட்டை பட்டி கிராமம்] அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி, பாலமுருகன், துரைக்கண்ணன், சரவணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாரதகுமார் [Melwa], ரஞ்சனி, சிவதர்ஷனி, காயத்ரி ஆகியோரின்அன்பு மாமியாரும், 

ஜிஷ்ணுதேவ், சம்ரிஷ், நிபுஷீ, அதிகா, அர்த்தவ், ரேயா ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் [சென்னை], ரஞ்சிதம் [சென்னை], பாலச்சந்திரன் [மஸ்கெலியா], பாலசுப்பிரமணியம் [பூண்டுலோயா], காலஞ்சென்ற பத்மாவதி [மாத்தளை], கிருஷ்ணவேணி [கொட்டகலை], மகேந்திரன் [திருச்சி], சகுந்தலா [ஹட்டன்] ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜப்பிள்ளை, நாகேஷ்வரி [சென்னை], காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்,ராஜமணி [திருச்சி] ஆகியோரின் அண்ணியும்,

காலஞ்சென்ற நீர்கொழும்பு பெரியசாமிப்பிள்ளை-தனபாக்கியம் அம்மாள், கண்டி பனையடியான்பிள்ளை-செல்வநாயகி, கொஸ்லாந்தை சுப்பிரமணியம்-பரமேஸ்வரி, நீர்கொழும்பு ஜெகநாதன்-சீத்தாலஷ்மி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-115/3, ஹம்டன் லேன், கொழும்பு-06. இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

 

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2024 04:00)