Mrs. Pernadathamma Arokianather
Date of Birth: 08 December 1945 - Deceased: 29 March 2026
யாழ். ஊர்காவற்றுறை மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பு-13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெர்னடேத்தம்மா ஆரோக்கியநாதர் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திமிங்குமுத்து செபமாலை - மரியை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
லூர்தம்மா, காலஞ்சென்றவர்களான ஜோசப், இம்மானுவேல் (திருபால்), பிரான்சிஸ் (உலகம்) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற ஆரோக்கியநாதர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சன்ரியூட், ஆன்சியா, எல்மன், டென்சியா, றூமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வினோதினி, எமன்சியன், றேமன், ஜெயந்தி, அனுஷியா ஆகியோரின் மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-04-2026 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, சரீரம் புனித யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
