திருமதி. பெருமாள் சந்திரகுமாரி

பெருமாள் சந்திரகுமாரி

தோற்றம்: 01 ஜூலை 1958 - மறைவு: 17 டிசம்பர் 2024

திருமதி. பெருமாள் சந்திரகுமாரி அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள்-பெருமாயி தம்பதியினரின் பாசமிகு மகளும், 

பெருமாள் பாக்கியம் அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்ற அரசன் மாணிக்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திருப்பதி, இரத்தினம், காமாட்சி, பழனியாண்டி, அமராவதி, கோவிந்தராஜா மற்றும் ஜானகி, இலட்சுமணன், மாரியாயி, விஜயகுமாரி, சத்தியசீலன், முத்துகுமார், தங்கராஜா, தங்கமணி, பத்மினி ஆகியோரின் சகோதரியும்,

நிரஞ்சலா வாசுகி, நிரஞ்சலா சரோஜினி, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரவணமுத்து, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வின், ரேணு, அனு, மீனு, பிரணவ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 - 4.30 மணிக்குள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2024 05:00)