திரு. பிலிப்பையா தேவதாசன் பௌலஸ்
(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி அதிகாரி)
தோற்றம்: 25 ஜூலை 1954 - மறைவு: 08 ஜூன் 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாவும், யாழ். இளவாளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலிப்பையா தேவதாசன் பௌலஸ் அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து பிலிப்பையா (ஆசிரியர்- சூசையப்பர் கல்லூரி திருகோணமலை) - சுவானப்பிள்ளை (பாக்கியம்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் தம்பிஐயா - மேரிதிரேசா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
மரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரணியின் (மாணவி யாழ்.பல்கலைக்கழகம்) ஆருயிர் தந்தையும்,
யேசுதாஸ் அன்ரனி (ஒய்வுபெற்ற ஆசிரியர் - புனித சூசையப்பர் கல்லூரி திருகோணமலை - அமெரிக்கா), மரியதாசன் (பிரித்தானியா, முன்னாள் இல்லற தூதுவர் (RC), சாந்த மரியா ஆகியோரின் சகோதரனும்,
இராஜகுலசிங்கம், அகஸ்டா தயாவதி, பேனடின் தவமலர், பற்றிமா, நீற்றா காலஞ்சென்றவர்களான தவராஜா, துரைசிங்கம், அன்ரன் பாலசிங்கம் (மேல் நீதிமன்ற நீதிபதி), ஞானரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
அருன் டினேஷ் (அமெரிக்கா), அலெக்ஸ் ரஜேந்த் (அமெரிக்கா), பற்றினா வேளாயினி (பிரித்தானியா) ஆகியோரின் சித்தப்பாவும்,
ஆன் திவ்யா, அனற் வித்யா, யேசுராஜன், கீர்த்தி ஆகியோரின் மாமனாரும்,
டயன் ரோஸ்டன், டியோல்ட்டன் கலிஸ்டஸ் ஆகியோரின் பேரனும்,ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மணத்தாவத்தை இளவாலையிலுள்ள காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கம் இல்லத்தில் நடைபெற்று, சேந்தாங்குளம் புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+94 74 345 7728
www.tamilthakaval.org
