திரு. பொன்னம்பலம் ஆனந்த நடராஜா
மறைவு: 15 ஜனவரி 2025
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நியூ யோர்க் - அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் ஆனந்த நடராஜா 15-01-2025 புதன் கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தானை கந்தையாபிள்ளை - நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,
செந்தூரன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா, சுரேனுகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சயனவியின்அன்பு பேரனும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம், தில்லை நடராஜா, செந்தில் நடராஜா மற்றும் சுந்தர நடராஜா, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற கோபாலன், திலகவதியார், மாலினி, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 - 8.00 மணி வரையும் New Hyde Park Funeral Home, 506 Lakeville Road இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-01-2025 திங்கட்கிழமை காலை 9.00 - 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
