திரு. பொன்னம்பலம் ஆனந்தகுமாரசாமி (உடையார்)
தோற்றம்: 15 மே 1945 - மறைவு: 16 நவம்பர் 2025
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் மற்றும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் ஆனந்தகுமாரசாமி அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பிராசா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 - 4.00 மணி வரையும், 22-11-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 - 4.0 மணி வரையும் Funerarium des Joncherolles (95, Rue Marcel Sembeat 93430 Villetameuse) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 - 11.20 மணி வரை அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.45 மணியளவில் திருவுடல் Crematorium des Joncherolles இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
